முற்றத்தில், கூடத்தில், தாழ்வாரத்தில், திண்ணையில் விளைந்தவை என் கதைகள். என்னுடன் பழகும் மனிதர்கள் எளிமையானவர்கள். சிடுக்குகள் நிறைந்த வாழ்க்கை அவர்களுடையது. என் பேனாவின் மசியை அவர்கள் இஷ்டமாய் நிரப்பித் தருகிறார்கள்.அதில் உருவான கதைகள் அவர்களைப் போன்றே எளிமையானவை.

கதைகளை ஆசுவாசத் திண்ணைகள் என்பேன். பாதசாரிகளுக்குத் திண்ணைகள் தேவை. ஆசுவாசமாய் அமர்ந்து கொள்ளவோ, ஒரே நீட்டாய் நீட்டி விட்டுக் கொள்ளவோ திண்ணைகள் அவ்வளவு இதம்.

இத்தொகுப்பிலுள்ள பத்து சிறுகதைகளிலும் சாமானியர்களே கதை மாந்தர்கள். கதைகளைப் படிக்கும் பொழுது ஒரு துளி வாஞ்சை அவர்கள்மேல் உண்டானால் அதுவே என் கதைகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாக கருதிக் கொள்வேன்.

– ஐ.கிருத்திகா

 

நூல் தகவல்:

நூல் : நாய்சார்

பிரிவு:  சிறுகதைத் தொகுப்பு

ஆசிரியர் : ஐ.கிருத்திகா

வெளியீடு : எதிர் வெளியீடு

வெளியான ஆண்டு :  2021

விலை: ₹ 140