ரலாறு குறித்து பல்வேறு தளங்களில் எழுதியும், படித்தும், பயணித்தப் போதும் நாங்கள் வியந்த, பிரமித்த, சந்தேகித்த, விவாதித்த, புதிதாக அறிந்து கொண்ட வரலாற்றின் நுணுக்கங்களே இக்கட்டுரைகள்.

வரலாற்றின் மேல் கவிந்துள்ள நூற்றாண்டு தூசியையும், சோம்பலையும், அதன் புராதனத்தையும் கொஞ்சம் திரை விலக்கி, வரலாற்ற்றை வெகுஜன தளத்தில் சுவாரஸ்யப்படுத்த வேண்டும், வரலாற்றை அறிந்து கொள்வதின் மூலமாகவே பிற துறைகளை, இன்றைய வாழ்வை, நம் மரபை, நம் புதுமையைப் புரிந்து கொள்ள முடியும் என்பதை இன்றைக்குள்ள இளைய தலைமுறையிடம் உணர்த்த வேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதப்பட்டவையே இத்தொகுப்பின் கட்டுரைகள்.

நூல் தகவல்:

நூல் : கம்பலை முதல்…

பிரிவு :  வரலாறு | கட்டுரைகள்

ஆசிரியர்: டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப ,  அ.வெண்ணிலா

பதிப்பகம் :  அகநி வெளியீடு

பக்கங்கள்: 172

வெளியான ஆண்டு :  2015

விலை :  ₹ 150